Quran Hadhees Tamil
𝑰𝒏𝒔𝒕𝒂𝒈𝒓𝒂𝒎: https://instagram.com/quran_and_hadhees_?igshid=d8zo310yqcwn 𝑭𝒂𝒄𝒆𝒃𝒐𝒐𝒌 https://www.facebook.com/quran_and_hadhees_-107774201126883/
إظهار المزيد413
المشتركون
لا توجد بيانات24 ساعات
+137 أيام
+3630 أيام
- المشتركون
- التغطية البريدية
- ER - نسبة المشاركة
جاري تحميل البيانات...
معدل نمو المشترك
جاري تحميل البيانات...
Repost from Quran Hadhees Tamil
00:50
Video unavailableShow in Telegram
﷽ "𝗔𝗻𝗱 𝗪𝗲 𝗵𝗮𝘃𝗲 𝗻𝗼𝘁 𝘀𝗲𝗻𝘁 𝘆𝗼𝘂, [𝗢 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 (ﷺ) ], 𝗲𝘅𝗰𝗲𝗽𝘁 𝗮𝘀 𝗮 𝗺𝗲𝗿𝗰𝘆 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱𝘀."
"وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ"
நபியே! உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
(அல்குர்ஆன் : 21:107)
9.11 MB
Repost from Quran Hadhees Tamil
﷽ ஒன்று சேர்க்கும் நேசம் 💎💚
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்டார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
*நூல்: புகாரி 3688*📗
▪️ நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான் என்று (நபியே) நீர் கூறுவீராக.
*அல்குர்ஆன் : 03:31*
▪️யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹுவின் அருள்பெற்ற இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் ஆவார்கள்.
*அல்குர்ஆன்:- 04:69*
இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியை பார்ப்போம்:
அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரின்பால் (ஸல்) மிகவும் கவலையோடு வந்தார், அவரிடம் நபி (ஸல்) அவர்கள் “இன்ன மனிதரே உங்கள் முகத்தில் கவலை தெரிகின்றதே! என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹுவின் தூதரே (ஸல்) நான் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தித்தேன், (எனக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது) என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் எது என்ன விஷயம் என்று கேட்டார்கள். அப்போது அவர், “தற்போது நாங்கள் உங்களிடம் காலையிலும் மாலையிலும் வருகின்றோம்; உங்களின் முகத்தைக் காலையிலும், மாலையிலும் பார்க்கின்றோம், உங்களோடு அமர்கின்றோம் (எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது) ஆனால் நாளை மறுமை நாளில் நீங்கள் இறைத்தூதர்களோடு உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள். அப்போது எங்களால் உங்களிடம் வர முடியாமல் போய்விடுமே என்று கூறி கவலைப்பட்டார்.
சிறிது நேரம் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு எந்த பதிலும் கூறவில்லை. அப்போதுதான் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்த வசனத்தை (04:69) கொண்டுவந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த அன்சாரித் தோழரிடம் ஆள் அனுப்பி இந்த நற்செய்தியை தெரிவித்தார்கள். (ஸயித் பின் ஜுபைர் (ரஹ்)
*நூல்: தப்ரானி, தஃப்ஸீர் தபரி, இப்னு கஸீர்*
﷽ *இதுவெல்லாம் பெருமானாரால் (ﷺ) மட்டுமே சாத்தியம்...!*💯
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
*அல்குர்ஆன் : 67:2*
💎நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக(தூதராக) அனுப்பப்பட்டிருக்கிறேன்".
*நூல் : ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747*📗
எல்லா முஹாஜிர் தோழர்களைப் போலவே தம் செல்வங்களையெல்லாம் மக்காவிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் ஓர் அகதியாக மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை மதீனாவாசியான ஸஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு, உடன் பிறவா சகோதரராக அறிவித்தார்கள் நபி (ஸல்).
பெருந்தன்மையான மனத்தின் சொந்தக்காரர் ஸஅத், தம் சொத்துகள் அனைத்திலும் சரிபாதியைத் தம் புதிய சகோதரருக்குப் பங்கிட்டுக் கொடுக்க முன் வந்தார். அவற்றை ஏற்க மறுத்த அப்துர் ரஹ்மான் (ரலி) *“எனக்கு, சந்தையைக் காட்டுங்கள்”* என்று சொன்ன தன்னம்பிக்கை வார்த்தைகள் நபித்தோழர்களின் வரலாற்றில் தனியிடம் பெற்றவை. வாழ்வாதாரம் அளிப்பவன் இறைவன் என்ற பேருண்மையின் வெளிப்பாடாய் அமைந்த வார்த்தைகள் அவை.
அவருடைய உழைப்புக்கேற்ற உயர்வை வழங்கினான் இறைவன். தாம் பெருஞ்செல்வப் பேறுகளைப் பெற்றுள்ளதைப் பற்றிப் பின்னொரு சமயத்தில் மக்களிடம் பேசும்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) சொன்ன விளக்கங்களில் ஒன்று இறை நம்பிக்கையுள்ள வணிகர்களுக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளது. அவர் சொன்னார்:
“▪️நான் குறைந்த ஆதாயத்தை (லாபத்தை)க் கூட அலட்சியப்படுத்தியதில்லை.
▪️என்னிடம் விலை கேட்கப்பட்ட எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில் வீணாகக் காலம் தாழ்த்தியதில்லை.
▪️நான் தவணை முறையில் விலையைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் விற்பனை செய்வதில்லை.
இந்த மூன்று காரணங்களையும்கூட நான் என் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளாகக் கருதுகிறேன்”.
https://chat.whatsapp.com/GSr0fp34FqjGR8oK41atuL
Quran and Hadhees 7️⃣
WhatsApp Group Invite
Photo unavailableShow in Telegram
﷽ கடல்களுக்கு இடையே திரை 🌊
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
▪️(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறாது.
- அல்குர்ஆன் : 55:19-20
00:12
Video unavailableShow in Telegram
﷽ ஒரு கதவு மூடினால் மற்ற ஆயிரம் கதவுகள் திறக்கும்.🗝️
-இமாம் அலி இப்னு அபூதாலிப் (ரலி)
📌எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, *அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன்* - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
-அல்குர்ஆன் : 65:3
https://chat.whatsapp.com/GSr0fp34FqjGR8oK41atuL
3.80 MB
Photo unavailableShow in Telegram
உம்ரா: அக்டோபர் - டிசம்பர் 2024
🕋 9 நாட்கள் மக்கா
🕌 4 நாட்கள் மதீனா
🌍 30+ வரலாற்று இடங்கள்
🚌 ஜியாரதிற்கு AC BUS
🏬 தமிழக உணவு
🕋 நிர்வாகத்தின் சார்பில் 3 உம்ரா
🧳 டிராவல் பேக்
💫 5 லிட். ஜம் ஜம் மற்றும் 3 கிலோ அஜ்வா பேரீச்சபழம்
🎤 அனுபவமிக்க வழிகாட்டிகள்
மேலும் ஆலிம்கள், குடும்பத்தோடு வருபவர்களுக்கு சலுகை உண்டு...
wa.me/916369617860
CONTACT,
63696 17860, 84892 85163
✉️[email protected]
📌 அர் ரிழ்வான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
56, காஜா முஹ்யித்தீன் தெரு, பாலக்கரை, திருச்சி-620008.
┈┉┅━✿• ✮ •✿━┅┉┈
اختر خطة مختلفة
تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.